நவக்கிரக வழிபாட்டை முடித்த பின்
நேராக இராமேஸ்வரம் போய்
இறங்கி விடக் கூடாது.
இராமேஸ்வரத்திற்குள்
நுழையும் முன் காவல்
தெய்வமாக பாம்பனில் இருக்கும் பைரவரிடம் அனுமதி
பெற வேண்டும். அப்படி
அனுமதி பெறா விட்டாலும் நிகழும் என்ன
நிகழும்?
இராவண வதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோசம் நீங்க சிவபூஜை செய்ய இராம நினைத்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரச் சொல்லி அனுமனை அனுப்பி வைத்தார். லிங்கத்தை தேடி வானில் பறந்தவர் காசி எல்லைக்குள் நுழைந்தார். சிவபூஜைக்கு வேண்டிய சுயம்பு லிங்கத்தை தேடி வந்தவருக்கு காசி முழுக்க லிங்கங்களாய் இருப்பது தெரிந்தது. இதில் எது சுயம்பு லிங்கம் என அவரால் அடையாளம் காண முடியவில்லை. களவாடியோ, கவர்ந்தோ
போக
வந்த அனுமனுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. கருடன் ஒரு லிங்கத்தை மட்டும் தன் பங்குக்கு வட்டமிட்டுக் காட்ட பல்லியோ அந்த லிங்கத்தின் மீது அமர்ந்து வாலாட்டிக் காட்ட சுயம்பு லிங்கத்தை அடையாளம் கண்டு கொண்ட அனுமன் ஆனந்தமடைந்தார். தன் பலம் பொருந்திய கரங்களால் அந்த லிங்கத்தை தூக்க முயன்றார்.