Monday 2 March 2015

ரசிக்க – சிந்திக்க – 6

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி. அதுவரையிலும் இந்தியப்பிரதமராக ஆண்களே இருந்து வந்ததால் பிரதமரின் அலுவலக அதிகாரிகள் பிரதமராக இருந்தவர்களைமிஸ்டர் பிரைம் மினிஸ்டர்என்றழைத்து வந்தனர். அதுவே மரபாகவும் இருந்து வந்தது. இந்திராகாந்தி பிரதமர் பதவி ஏற்றதும் அந்த மரபிற்கு சோதனை வந்தது. பெண்பிரதமர் என்பதால் அவரை எப்படி அழைப்பது? என்ற குழப்பம் பிரதம அலுவலக அதிகாரிகளுக்கு வர அவர்களின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட இந்திரா சொன்னார். என்னையும்மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்என்றே அழையுங்கள்

 ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்என்ற பாரதியின் வரிக்கேற்ப தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத இந்திராவின் அந்த மனநிலைதான் அவரைத் துணிச்சல் மிகு நிர்வாகியாக்கி இந்தியாவின் இரும்பு பெண்மணியாக்கியது. எதற்காகவும், எதன் பொருட்டும் உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். அது உங்களுக்கே உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வைக்கும்.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்