Tuesday 16 July 2013

கவிஞனும் கடவுளும்

வார்த்தைகள்
படைப்புகளாக மலர்ந்து
படைப்பாளியை பின் தள்ளியது.

வேண்டுதல்கள்
வரங்களாக இறங்கி
கடவுளை பின் தள்ளியது.

எனினும் -
தன்னை பின் நிறுத்திய
வார்த்தைகளுக்காகவும்
வேண்டுதல்களுக்காகவும்
யுகங்கள் தோறும்
காத்திருக்கின்றனர்

கவிஞனும்
கடவுளும்!

நன்றி : அதீதம்