துர் சொப்பனம்
நிஜத்தில் நிகழாதிருக்க
கிணற்றுக்குள் கல்லைப்போடு.
புதிதாய் முளைக்க
விழுந்த பல்லை
சாணம் உருட்டி கூரையில் விட்டெறி
திடுக்கிட்ட நெஞ்சு
திடமாய் மாற
மூன்று முறை எச்சில் உமிழு
கண்ணேறு மறைய
காலனா சூடத்தை
முற்றத்தில் கொளுத்து
இருள் பாதை கடக்க
மூச்சு விடாமல்
இறை நாமம் சொல்லு
தலைமுறை தோறும்
உயிர்த்திருந்த உபதேசங்கள்
உதிர்ந்து சருகானது
அடுக்குமாடி குடியிருப்புகள் வந்த பின்.
நன்றி : திண்ணை