துப்பறியும் நாவலின் இலக்கணச் சால்வழி பிசகாது நகரும் இக்கதை, வாசக எதிர்பார்ப்புகளை ஏமாற்றவில்லை. மிக கவனமாக சஸ்பென்ஸ் கடைசிவரை பாதுகாக்கப்பட்டுள்ளது. கதையோட்டமும், பாத்திர நகர்த்தலும் அலுப்புத்தட்டாத வகையில் அமையப் பெற்றுள்ளது. முற்றிலும் புதிதான ஒரு தளத்திலிருந்து வாசகர்களைச் சந்திக்கும் கோபி சரபோஜியின் துரத்தும் நிஜங்கள் என்ற இந்நாவல் ”எழுதவல்லார் எதையும் எழுதவல்லார்” என்று எழுத்தாளர் சங்கத்தலைவர் வாசவன் அடிக்கடி சொல்வதை மெய்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
டாக்டர். ஹிமானா சையத்
எழுத்தாளர் & பதிப்பாளர்